தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விஜய் இயக்கி முடித்துள்ள ’தலைவி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதமே இந்த திரைப்படம் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் விஜய் அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இது ஒரு ஓடிடி தளத்திற்காக உருவானதாம். இந்த படம் நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டது என்பதால் இந்தப் படத்தில் நான்கு முக்கிய நடிகைகள் நடித்து இருக்கிறார்கள்.
நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர்தான் அந்த நான்கு முக்கிய நடிகைகள். பிரபல தெலுங்கு நடிகர் விசாகா சென் இந்தப் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
மேலும், இந்தப் படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்பதால் ’தலைவி’ ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.