‘கட்டப்பாவ காணோம்’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணி செயோன் புதிய படமொன்றை இயக்குகிறார்.
VR டெல்லா பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் V.R.மணிகண்டராமன் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
க்ரைம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கின்றார். ஹெபா படேல், சாந்தினி தமிழரசன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், முருகதாஸ், ராஜ்குமார், அஜித் கோஷி ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – மணி பெருமாள், இசை – சந்தோஷ் தயாநிதி, படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், கலை இயக்கம் – M.லஷ்மி தேவா, புரொடக்ஷன் எக்ஸிகுயுடிவ் – D.சரவண குமார் (ராஜு), பாடல்கள் – உமா தேவி, கோசேஷா, பாலா, டிசைனர் – நவீன், நடன இயக்கம் – கல்யாண், சந்தோஷ், சண்டை இயக்கம் – விக்கி நந்தகோபால், உடைகள் வடிவமைப்பு – நிகிதா நிரஞ்சன், புகைப்படங்கள் – ராஜேந்திரன், மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM).
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது.