Friday, April 12, 2024

ஒரே நாளில் மோதும் 2 பெரிய பட்ஜெட் படங்கள்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ திரைப்படமும், ‘கேஜிஎஃப்-2’ படமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றன.

ருத்ரன்’ படத்தினை  தயாரிப்பாளர் S.கதிரேசன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். மேலும், பிரியா பவானி சங்கர் நாசர், பூர்ணிமா ஜெயராம் உள்ளிட்ட பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

K.P.திருமாறனின் கதை, திரைக்கதையில் உருவாகும் இந்த ருத்ரன்’ படத்திற்கு G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். R.D. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் கே.ஜி.எஃப்-2’ திரைப்படத்திற்கு இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. கன்னட நடிகர் யாஷின் நடிப்பில் உருவான இதன் முதல் பாகம் கன்னட திரையுலக வரலாற்றிலேயே மிக அதிக வசூலை வாரிக் குவித்திருப்பதால் இந்த இரண்டாம் பாகத்தை அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ‘கேஜிஎஃப்: சேப்டர்-2’ படத்தில் ஹீரோ யாஷுடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் போன்ற பாலிவுட் பிரபலங்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். நடிகர் பிரகாஷ் ராஜும் இப்படத்தில் நடித்திருக்கிறார்.

நடிகர் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியான ‘கேஜிஎஃப் : சேப்டர்-2’ படத்தின் டீஸர் 200 மில்லியன்களுக்கு மேல் பார்வையிடல்களைப் பெற்றுள்ளது. தென்னிந்திய சினிமாவில் இதுவொரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஒட்டு மொத்த இந்திய சினிமாவை எடுத்துக்கொண்டால் பாலிவுட் படங்களுக்குதான் இந்தியா முழுமைக்கும் ரசிகர்கள் இருந்தனர். ஆனால், இதனை மாற்றிக் காட்டிய முதல் தென்னிந்திய படம் ‘பாகுபலி’. இப்படத்திற்குப் பிறகு மீண்டும் அதே போன்றதொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘கேஜிஎஃப்: சேப்டர்2’.

ஒரே நேரத்தில் பல மொழிகளில் ரிலீஸாகவிருக்கும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படமும் அதே 2022 ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்றுதான் வெளியாகவுள்ளது.

இரண்டுமே மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் அந்த நாளில் வேறு பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News