மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம், கடந்த ஆண்டு மிக அதிகமான மக்களை திரையரங்கிற்கு ஈர்த்த படம் என்ற சாதனையை புரிந்தது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இப்படம், 2 பாகங்களாக உருவாகி உள்ளது. இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் 2-ம் பாகம் வரும் 2023 ஏப்ரல் 28-ந்தேதி வெளியாக ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஹாங்காங்கில் நடைபெற இருக்கும் 16வது ஆசிய திரைப்பட விருதுகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம், சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்குனர், சிறந்த உடை அலங்காரம், உள்ளிட்ட 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.