Join our community of SUBSCRIBERS and be part of the conversation.

To subscribe, simply enter your email address on our website or click the subscribe button below. Don't worry, we respect your privacy and won't spam your inbox. Your information is safe with us.

News

Company:

Thursday, March 13, 2025

Touring Talkies

‘பொன்னியின் செல்வனு’க்கு டிவிட்டரில் சுவாரஸ்யமாக பிரமோஷன் செய்யும் நடிகர், நடிகையர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும், மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன்’ படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.

படத்தின் வேலைகள் ஒருபுறம் நடைபெறும் நிலையில், இன்னொருபுறம் படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளே இறங்கியுள்ளனர்.

ஆதித்த கரிகாலனாக’ நடித்துள்ள விக்ரம், ‘வந்திய தேவனாக’ நடித்திருக்கும் கார்த்தி, ‘குந்தவை’யாக நடித்துள்ள த்ரிஷா ஆகியோர் பொன்னியின் செல்வன்’ படத்தை சமூக வலைத்தளங்கள் மூலமும் தீவிரமாக பிரபலப்படுத்துகின்றனர்.

விக்ரம் தன்னுடைய ட்விட்டர் பகுதியில் இருந்த பெயரை ‘ஆதித்த கரிகாலன்’ என மாற்றியுள்ளார். அதேபோல் 55 லட்சம் Followers-களை கொண்ட த்ரிஷா தன்னுடைய பெயரை ‘குந்தவை’ என பதிவிட்டுள்ளார். மேலும் Profile புகைப்படங்களையும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வரும் தங்கள் கதாப்பாத்திரதின் புகைப்படங்களை வைத்துள்ளனர்.

இது தவிர டிவிட்டர் பதிவுகளை பொன்னியின் செல்வன்’ கதையோட்டத்துடன் கூடிய உரையாடல் பாணியில் நிகழ்த்துகின்றனர்.

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலன் விக்ரமின் நண்பன் வந்திய தேவனாக கார்த்தி நடித்துள்ளார். அதேபோல் தங்கை குந்தவையாக த்ரிஷாவும், தம்பி அருண்மொழியாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.

ஆதித்த கரிகாலனான நடிகர் விக்ரம், “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டத் திக்கும் புலிக் கொடி திரைப் பயணம் தொடங்கும் முன், பெருவுடையார் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை உடன் வருகிறாயா? வந்திய தேவன் வருவான். என்ன நண்பா,  வருவாய்தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

ஆதித்த கரிகாலனான விக்ரமின் பதிவுக்கு பதிலளித்து ‘வந்தியத் தேவன்’ கார்த்தி பதிவிட்டுள்ளார். அதில், “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கைவரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever. I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me” என கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து விக்ரம் தன் பதிவில் “சில போர்களை தனியாகத்தான் வெல்ல வேண்டும்” என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர்களின் பதிவுகள் அடுத்தடுத்து சுவாரஸ்யமாக வருகிறது.

இவர்களின் உரையாடல்களால்  அடித்து அடுத்து என்ன என்று ரசிகர்கள் குஷியாகிவிட்டனர் . இவை அனைத்தும், டிவிட்டர் உரையாடலாக இருந்தாலும், படத்தின் கதை தன்மையிலும், கதாபாத்திரங்களின் பின்னோட்டத்துடனுமே இருக்கிறது.

இந்த வகையிலான புரமோஷனுக்கு முதல் அடித்தளமிட்டவர் கார்த்தி. குந்தவை கதாபாத்திரத்தை அறிமுகம் செய்த அன்று, நடிகர் கார்த்தி “இளவரசி.. Please send me live location. உங்கள் அண்ணனின் ஓலையை drop off பண்ணனும்!” என பதிவிட்டார். அதற்கு த்ரிஷா, “Sorry அரண்மனையில் smart phones and smart people not allowed” என பதிலளித்தார்.

இவர்களின் இந்த இரண்டு பதிவுகளும் பொன்னியின் செல்வன்’ படத்தை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்த அடித்தளமாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தள புரமோஷன் தவிர, சென்னை, கேரளா, கர்நாடகா, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி, துபாய் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்குகின்றனர்.

“எங்கு சென்றாலும் படம் வெளியாகும் செப் 30-ம் தேதியன்று சென்னையில்தான் இருப்போம்” என்று அனைவரும் கூறியுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News

Hide WhatsApp Form
<p>How can I help you? :)</p>