Saturday, September 14, 2024

நான் ஆதியை அறிமுகப்படுத்தினேன், ஆனால் அவர் பலரைக் களத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்… இயக்குனர் சுந்தர் சி பெருமிதம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹிப்ஹாப் தமிழா ஆதி கடைசியாக கார்த்திக் வேணுகோபால் இயக்கிய பி.டி சார் படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிப் பெற்றது. அதன்பிறகு, ‘கடைசி உலகப் போர்’ படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தை ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது. இப்படத்தில் நாசர், நட்டி நட்ராஜ், முனிஷ்காந்த், ஷா ரா, அனாகா, அழகம் பெருமாள், சிங்கம்புலி, குமரவேல், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு ஆக்ஷன் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சுந்தர்.சி, “என்னோட மகள் கல்லூரியில் புதிய கட்டத்தை எட்டுகிறாள், அதைப் பார்த்து என் மனைவி வீடியோ எடுத்துப் பார்த்தபோது எனக்கு கண்ணீர் வந்தது. அதேபோல் எனது தம்பிகளைப் பார்க்கும்போதும் அதே உணர்வு வருகிறது.

என்னிடம் வெறும் தன்னம்பிக்கையுடன் வந்தவர்கள் இன்று தயாரிப்பு நிறுவனங்களை வளர்த்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி. நான் ஆதியை அறிமுகப்படுத்தினேன், ஆனால் அவர் பலரைக் களத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் படத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை எனக்குத் தருமளவு, அவர் என்னை மரியாதைப்படுத்தியமைக்கு நன்றி. மேலும் வளர எனக்கு வாழ்த்துக்கள்,” என்றார்.

- Advertisement -

Read more

Local News