Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

கொஞ்சம் பார்த்து கவனிக்க சொல்லிய விஷால்… கவனித்த சுந்தர் சி…அரண்மனை 4 Vs ரத்னம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஷால் கையில் எடுத்த படங்கள் எதுவும் கைக்கொடுக்கவே இல்லை. கம் பேக் கொடுக்க போராடி கொண்டிருந்தார் விஷால்.இந்த நிலையில சமீபத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் விஷாலுக்கு பெரிய வெற்றியை தந்துவிட்டது .

ஆனால் என்னதான் வெற்றியை கொடுத்தாலும் அந்த வெற்றிக்கு காரணமு எஸ்ஜே சூர்யாவுடன் கூட்டணி வைத்ததால் தான் என பேசப்பட்டது.இதனை தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களை எப்படியாவது வெற்றி படங்களாக்க மாற்ற கடுமையாக உழைத்து வருகிறார் விஷால்.

இந்நிலையில் விஷால் நடித்து ஹரி இயக்கத்தில் வெளிவரவுள்ள ரத்னம் படம் வருகிற ஏப்ரல் 26ல் ரிலீசாக உள்ளது.அதோபோல் சுந்தர் சி-ன் அரண்மனை படமும் அதே தேதியில் ரிலீசாக இருந்த நிலையில் அரண்மனை 4 வந்தால் ரத்னம் படத்துக்கு கலெக்ஷன் எல்லாம் ராங் ஆகிவிடும் என்பதால் சுந்தர் சி-ஐ சந்தித்து அரண்மனை 4 ரிலீஸ் தேதியை கொஞ்சம் பார்த்து கவனிக்க சொல்லி கேட்டாராம் அதற்கு என்கையில் ஒன்றுமில்லை தயாரிப்பு நிறுவனம் தான் முடிவெடுக்கும் என முடித்து இருக்கிறார் சுந்தர் சி.

பின்னர் ஒருகட்டத்தில் விஷாலின் கோரிக்கைக்கு சம்மதித்த சுந்தர் சி பொங்கல் தினத்திலிருந்து ஏப்ரல் 11 அங்கிருந்து ஏப்ரல் 26க்கு வந்த ரிலீஸ் தற்போது விஷாலின் நலனை கருத்தில் கொண்டு வருகிற மே 3ம் தேதி ரிலீசாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.ஆக மொத்தத்தில் நைசாக பேசி காரியத்தை சாதித்து விட்டார் விஷால்.

- Advertisement -

Read more

Local News