Saturday, September 14, 2024

கமல்ஹாசன் சார் சினிமாவுக்குக் கிடைத்த பரிசு… நடிகர் நானி ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவின் ‘நேச்சுரல் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகர் நானி, ‘அந்தே சுந்தரானிகி’ படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயாவுடன் மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற 29-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் நானி ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார். அப்போது சினிமாவில் அவருக்கு ஊக்கமளித்த நடிகர் குறித்து கேட்டபோது, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசனை அவர் குறிப்பிடுகிறார்.

அவர் கூறுகையில், “கமல்ஹாசன் சார் சினிமாவுக்குக் கிடைத்த பரிசு என்று நினைக்கிறேன். நடிப்பில் மட்டுமில்லாமல் சினிமாவின் பல துறைகளிலும் அவர் சிறந்து விளங்குகிறார். சினிமாவுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். 5 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இன்றும் முன்னணி நடிகராக இருக்கிறார். அவரிடம் பல பிரமாண்டமான படங்கள் உள்ளன. இவை போன்ற சாதனைகளை உடைக்க முடியாது என்று நினைக்கிறேன்,” என நானி தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News