Join our community of SUBSCRIBERS and be part of the conversation.

To subscribe, simply enter your email address on our website or click the subscribe button below. Don't worry, we respect your privacy and won't spam your inbox. Your information is safe with us.

News

Company:

Wednesday, March 12, 2025

Touring Talkies

தெலுங்கு திரையுலகை அதிர வைத்த இயக்குநர் அட்லீ.

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அட்லீ, இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி பரபரப்பாக பேசப்பட்டார். அவர் இயக்கிய ஜவான் படம் ஆயிரத்து நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க அவர் முடிவு செய்திருக்கிறார். இதற்காக நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்து பேசி இருக்கிறார். இந்தியா அளவில் பல மொழிகளில் தயாராக உள்ள அந்தப் படம் மிகப்பெரிய பிரமாண்ட படமாக அமைய இருக்கிறது. அதற்கான பட்ஜெட் பெரிதாக இருப்பதால் அந்தப் படம் குறித்த பேச்சு வார்த்தை ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது.

இந்தப் படத்தை தயாரிக்க தமிழில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக சேர்த்துக் கொள்வது குறித்தும் பேசப்பட்டிருக்கிறது.

மேலும், இயக்குநர் அட்லீ அதிக சம்பளம் மற்றும் வணிகத்தில் பங்கு என்று தெலுங்கு இயக்குனர்கள் கேட்டிராத பெரும் தொகையை கேட்டிருக்கிறாராம். இதனால் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் அது குறித்து இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறாராம்.

வியாபாரத்தில் பங்கு என்ற அட்லீயின் சம்பள தகவல் தெலுங்கு திரையுலகில் வெளியாகி அதிர வைத்திருக்கிறது. ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் தான் இப்படி வியாபாரத்தில் பங்கு அல்லது ஏரியாவை கேட்பார்கள். இயக்குநர் ஒருவர் இப்படி கேட்கிறாரே என்று பரபரப்பாகியுள்ளது.

அட்லீ கேட்டிருக்கும் சம்பளம் மாற்றும் வியாபாரத்தில் பங்கு என்பதை தயாரிப்பு தரப்பு ஏற்றுக் கொண்டால் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான இந்த மாதம் எட்டாம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் தற்போது ‘புஷ்பா’ இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 15 அன்று வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News

Hide WhatsApp Form
<p>How can I help you? :)</p>