தளபதி விஜய் தமிழ் சினிமாவின் தூண் எனலாம்.தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படம் உருவாகி கொண்டு இருக்கிறது.விரைவில் படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/GOATTTT.jpg)
தி கோட் திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் போன மாதம் கேரளா திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட்டது.இப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பிற்காக சில தினங்களுக்கு முன்பு விமானம் மூலம் துபாய் மூலமாக ரஷ்யா சென்றார் விஜய். இன்னும் ஓரிரு நாட்களில் படபிடிப்பு முடிய உள்ள நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க நாடு திரும்புவார் எதிர்பார்க்கப்படுகிறது.
தி கோட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி69 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இந்த திரைப்படத்தை எடுத்தபின் முழுநேரமும் அரசியலில் மக்களுக்காக பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.அதற்காக கட்சியை வலுப்படுத்துவது போன்ற பல விஷயங்களை எப்போதோ தொடங்கிவிட்டார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/TVKKK.jpg)
இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு சாய் பாபா கோவிலில் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது.அவர் சென்ற கோவில் சீரடி சாய்பாபா கோவில் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இதுவென தகவல் பரவியது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/04/VHHH.jpg)
அதேசமயம் நடிகர் விஜய் அவருக்கு சொந்தமான நிலத்தில் அவருடைய தாய் ஷோபாவிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் சாய் பாபா கோவில் இருக்கிறார்.அந்த கோவிலை சென்னை கொரட்டூர் பகுதியில் அவருக்கு சொந்தமான நிலத்தில் கட்டியுள்ளார். அவர் கட்டியுள்ள கோவிலுக்கு சென்ற பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அந்தசமயத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இது என தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.