பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமாகியுள்ள சுஜிதா, அண்மையில் ஒரு ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டார். அதில் இரண்டு ஏர் ரைபிள் வகை துப்பாக்கிகள் காணப்பட்டன. இதுகுறித்து இணையதளங்களில் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், சுஜிதா தனுஷ் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ‘நீலகிரி சுற்றுலா சென்றபோது என் நண்பரின் வீடு மருதமலை அடிவாரத்தில் இருந்தது. அவரது வீடு அழகாக இருந்ததால் ஹோம் டூர் வீடியோ எடுக்க அனுமதி கேட்டேன். அந்த வீடியோவில் அவர்கள் வீட்டிலிருந்த துப்பாக்கிகளுக்கு லைசன்ஸ் தேவையில்லை என்று கூறியிருந்தேன். அதுதான் தற்போது சர்ச்சையாக உருவாகியுள்ளது.
அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்யவில்லை. வனத்துறையினர் அவர்களை எந்தவித கேள்வியும் கேட்கவில்லை. அதனால் இதெல்லாம் தேவையில்லாத வேலை’ என்று அந்த வீடியோவில் சுஜிதா தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.