மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.

தற்போது, வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் தயாரிப்பில், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ‘பி.டி. சார்’ படத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்திற்குப் பிறகு, ஹிப்ஹாப் ஆதி 2 படங்களில் நடித்து வருவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், தனது 8வது படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. அவரே தயாரித்து, இயக்கி, நடிக்கும் இந்தப் படத்திற்கு கடைசி உலகப் போர் எனப் பெயரிட்டுள்ளனர். இதன் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் கிளிம்ஸ் வீடியோ நாளை (ஜூலை 19) வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. நண்பர்களுடன் இணைந்து இந்தப் படத்தை இயக்கியுள்ளதாகவும், மக்கள் தங்கள் ஆதரவை வழங்குமாறு ஹிப்ஹாப் ஆதி கேட்டுக் கொண்டுள்ளார்.