Saturday, September 14, 2024

மாரி செல்வராஜூடன் மீண்டும் கூட்டணி அமைக்கிறாரா தனுஷ்? வெளியான அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “வாழை” திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை படக்குழுவினர் பெருமிதமாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும், “பைசன்” படத்தையும் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து, தனுஷ், கார்த்தி, ரஜினி ஆகியோரின் நடிப்பில் தனது அடுத்தடுத்த படங்களை இயக்கவுள்ளார்.

இந்த நிலையில், மாரி செல்வராஜ் “பைசன்” மற்றும் தனுஷ் படத்திற்காக புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளார். விளையாட்டு கதைக்களத்தில் உருவாகும் “பைசன்” படத்தில், நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அவருடன் அனுபமா, லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று “வாழை” படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசுகையில், மாரி செல்வராஜ், 

“பைசன்” படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 60 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், தனுஷ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும்,” என்றார். இது மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் ஆகும். இதற்கு முன்பு, 2021-ம் ஆண்டு வெளியான “கர்ணன்” படத்தை, தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News