Saturday, September 14, 2024

கதையின் நாயகன் சூரியின் பிறந்தநாள்… குவியும் வாழ்த்துக்கள்… #SOORI

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ படத்தில் சூரி கதையின் நாயகனாக அறிமுகமாகி, தனது திறமையை நிரூபித்தார். சண்டைக்காட்சிகளில் எடுத்த ரிஸ்க், உடல்மொழி உள்ளிட்டவற்றில் பாஸ் மார்க் பெற்ற அவர், ரசிகர்களால் பாராட்டப்பட்டார். இனி சூரி கதையின் நாயகனாகவே தொடர்ந்து செயல்படுவார் என்று ஆரூடம் கூறப்பட்டது.

அதன்படி, அவரது நடிப்பில் ‘கருடன்’ படமும் வெளியானது. இந்த படத்திலும் அவர் அதே திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். சூரியின் நடிப்பு மிகவும் பிரகாசமாக இருந்ததாகவும், அவரது பாடுபட்ட காலங்களுக்கு தற்போது தான் பலன் கிடைத்துள்ளது என்று கூறப்பட்டது. சூரி, இனி கதையின் நாயகனாகவே தொடர்வேன் என்று கூறியுகூறியிருந்தார்.

அதன்பிறகு, பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய ‘கொட்டுக்காளி’ படத்தில் சூரி நடித்தார். இந்தப் படமும் விமர்சன ரீதியாக மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது. இந்நிலையில், சூரி தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார், அதற்காக பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பிலும் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

- Advertisement -

Read more

Local News