Thursday, April 11, 2024

நட்புக்காக தேங்காய் சீனிவாசன் செய்த காரியம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் முத்திரை பதித்தவர் மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசன்.

இவர் நட்பைப் போற்றுபவர். இது குறித்து டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், நடிகரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்த சம்பவம் இது..

“ஒரு முறை படப்பிடிப்புக்காக தேங்காய் சீனிவாசன் திருவனந்தபுரம் செல்ல வேண்டிய சூழ்நிலை. அப்போது பத்திரிகையாளராகவும், பி.ஆர்.ஓ.ஆகவும் இருந்த என்னையும் அழைத்துச் சென்றார்.

 

ஒருமுறை அவர் சிங்கப்பூர் சென்று வந்த போது, எனக்காக வாட்ச் ஒன்றை வாங்கி வந்து அன்பளித்தார். நான் வாழ்க்கையில் கட்டிய முதல் வாட்ச் அதுதான்” என்று நெகிழ்வுடன் சொன்னார் சித்ரா லட்சுமணன்.

தேங்காய் சீனிவாசனின் நட்பை உணர்த்தும் இன்னொரு சம்பவம்..

அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.   மிகவும் கவலையடைந்த தேங்காய் சீனிவாசன் வென்னிற ஆடை மூர்த்திக்கு உடல்நிலை சரியாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு,  திருப்பதிக்கு நடந்தே சென்று வந்தார்.

இதை, டூரிங் டாக்கீஸ் நிகழ்ச்சி ஒன்றில் வெண்ணிற ஆடை மூர்ததி சொல்லி, கண் கலங்கினார்.

நட்பில் ஹீரோதான் தேங்காய் சீனிவாசன்.

- Advertisement -

Read more

Local News