G.S.ARTS சார்பில் G.அருள் குமார் வழங்கும், தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில், ஆக்ஷன் கிங் அர்ஜீன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும், புதிய க்ரைம் திரில்லர் திரைப்படத்தில், நடிகர் விஷாலின் தந்தையும், பிரபல தயாரிப்பாளர், நடிகர் G.K.ரெட்டி மற்றும் நடிகர் கதிரின் தந்தை லோகு ஆகியோர் இணைந்துள்ளனர்.
ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகும் ஒரு க்ரைம் – த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை, இது மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் அமைந்துள்ளது.
G.K.ரெட்டி இப்படத்தில் நடிகர் அர்ஜூனின் தந்தையாக நடிக்கிறார். நடிகர் கதிரின் தந்தையான லோகு, படத்தில் கதையின் திருப்புமுனைக்கு உதவும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
இரு பாத்திரங்களும் படத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால், இப்பாத்திரங்களை சிறப்பாக கையாளும் சிறந்த நடிகர்களை தேர்வு செய்ய வேண்டுமென படக்குழு முடிவு செய்திருந்தது. பல கட்ட தேர்வுகளுக்கு பிறகே, G.K.ரெட்டி & லோகு ஆகியோரை இப்பாத்திரங்களுக்காக படக் குழு தேர்வு செய்துள்ளனர்.
இப்படம் க்ரைம், திரில்லர் விசாரணை வகையை சேர்ந்த படமென்றாலும், படத்தில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் முக்கியமாக அப்பா, மகன் உறவு ஆழமாக சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இப்படத்தில் அர்ஜூன் மற்றும் G.K.ரெட்டி இருவரது பாத்திரங்களும் சிறப்பாக இருக்குமென்று படக் குழு தெரிவித்துள்ளது.
ஆக்ஷன் கிங் அர்ஜீன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விரைவில் அனைத்து நடிகர்களும் பங்கு கொள்ளக் கூடிய இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது.