‘தக் லைப்’ திரைப்படத்தின் பெரும் காட்சிகளோடு கூடிய பிரீ-ரிலீஸ் விழா நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்ட முக்கிய திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய கமல்ஹாசன், “மரோ சரித்ரா’ படத்துக்குப் பிறகு விசாகப்பட்டினம் என்னை ஒரே இரவிலே நட்சத்திரமாக மாற்றிய சிறப்புமிக்க நகரமாகும். எனவே இது எனக்கு இரண்டாவது வீடு போன்றதாக இருக்கிறது.
நான் இதுவரை 15 தெலுங்குப் படங்களில் நடித்துள்ளேன். அதில் 13 படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வெற்றியடைந்துள்ளன. இதற்காக உங்கள் அனைவரிடமும் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். ‘தக் லைப்’ ஒரு சிறந்த படமாக உருவாகியுள்ளது. ஜூன் 5ஆம் தேதி உங்கள் பதிலுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.