தமிழின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் பெரு வெற்றி பெறுகின்றன. ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கிறார்.
ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அவர் பட்ட சிரமங்கள் அதிகம். துவக்க காலத்தில் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர்தான், விஜயை வைத்து படங்களை இயக்கி தயாரித்தார். இவை வெற்றிப்படங்களாக அமையவில்லை.
ஒரு கட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், “இனி உன்னை வைத்து படம் எடுக்க மாட்டேன். நடிப்பை மறந்துவிடு. உன்னால் என் இரண்டு வீடுகளை விற்றுவிட்டேன்” என்று ஆத்திரமாகக் கூறி இருக்கிறார்.
இதனால் வருத்தமடைந்த விஜய் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அப்போது அவரது தாயார், ஷோபா தான், “இன்னும் ஒரே ஒரு படம் மட்டும் விஜயை வைத்து எடுங்கள். அது சரியில்லாவிட்டால் விஜயை நடிப்பில் இருந்து ஒதுங்கச் செய்து விடலாம்” என்று கூறியிருக்கிறார்.
அதுபோல விஜயை நாயகனாக வைத்து படம் எடுக்க ஓரளவு வெற்றி கண்டது. அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்கள் ஆனது. தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் விஜயைத் தேடி வந்தனர்.
இந்த அளவுக்கு பெரிய வெற்றி கிடைக்க காரணம், விஜய் தனது நோக்கத்தில் உறுதியாக இருந்ததுதான். லட்சியத்தை நோக்கியே நகர்ந்தால், வெற்றி நிச்சயம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் விஜய்.