Thursday, April 11, 2024

வாரிசுடு, படத்துக்கு பிரச்சினை இல்லை!: சொல்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

யு டியுப் சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார், திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியன். அப்போது அவர், “வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, விஜய் நடிக்கும் வாரிசு படம் வெளியாகிறது. இதே படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வாரிசுடு என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், ‘நேரடி தெலுங்கு படங்களுக்குத்தான் அதிக திரையரங்குகளை அளிக்க வேண்டும். டப்பிங் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது’ என்ற குரல் எழுந்திருக்கிறது.

இதனால் வாரிசுடு  படம் அந்த இரு மாநிலங்களில் வெளியாகுமா  என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

இது தேவையற்ற கேள்வி.

எந்த ஒரு மாநிலத்திலுமே அந்த மொழி படங்களுக்குத்தான் முன்னுரிமை தருவார்கள். கேஜிஎப்

இங்கு கே.ஜி.எப். வெளியானபோதுதான் பீஸ்ட் வெளியானது. ஆனால் பீஸ்ட் படத்துக்குத்தானே அதிக திரையரங்குகள் கிடைத்தன.. அதே போல காந்தாரா படம் இங்கே வெளியானபோதும், வேறு தமிழ்ப் படங்களுக்குத்தானே அதிக திரையரங்குகள் கிடைத்தன..

குறைவான திரையரங்குகள் கிடைத்தாலும் அந்த இரு மாநிலங்களில் வாரிசுடு வெளியாகும்.  எந்த படத்தை ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதற்கான திரையரங்குகள் அதிகரிக்கும்.. அவ்வளவுதான்” என்றார் திருப்பூர் சுப்ரமணியம்.

- Advertisement -

Read more

Local News