Friday, April 12, 2024

‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் மொராக்காவிலா, தென் ஆப்ரிக்காவிலா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜீத்குமாரின் ‘வலிமை’ திரைப்படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நாளை மீண்டும் ஹைதராபாத்தில் துவங்குகிறது. இந்த மாத இறுதிவரையிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.இந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு வெளிநாட்டில்தான் படமாக்கப்பட வேண்டும்.

முதலில் ஹைதராபாத்திலேயே படமாக்கிவிடலாம் என்று நினைத்திருந்தார் இயக்குநர் ஹெச்.வினோத். தற்போது பல வெளிநாடுகளில் கொரோனாவுக்கான லாக் டவுனை தளர்த்தியிருப்பதால் வெளிநாட்டில்தான் படப்பிடிப்பு என்பதில் உறுதியாக இருக்கிறார் இயக்குநர் வினோத்.

இப்போது எந்த நாட்டில் படப்பிடிப்பு நடத்தப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. இதற்காக இரண்டு நாட்களைத் தேர்வு செய்திருக்கிறாராம் இயக்குநர் வினோத். மொராக்கோ, தென் ஆப்ரிக்கா என்ற இரண்டு நாடுகளில் எந்த நாட்டிற்குச் செல்வது என்பது அடுத்த மாத துவக்கத்தில் தெரிந்துவிடுமாம்.

இதில் மொராக்கா நாட்டைத்தான் படத்தின் துவக்கத்தில் இருந்தே இயக்குநர் வினோத் குறித்து வைத்திருந்த இடம். ஆனால் இப்போது அங்கே வெளிநாட்டினருக்கான கட்டுப்பாடுகள் சிலவை கடுமையாக இருப்பதால்தான் தயாரிப்பாளர் போனி கபூர் அதிக ஆர்வம் காட்டாமல் ஹைதராபாத்தில் செட் போட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தாராம்.

இப்போது நிலைமை அங்கே சரியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். இதனால் வலிமை அடுத்து தனது வித்தையைக் காட்டும் இடம் மொராக்காவாகத்தான் இருக்கும் என்கிறது இயக்குநர் வினோத்தின் நட்பு வட்டாரம்.

இதற்கிடையில் நடிகர் அஜீத்குமார் சென்ற முறை நடைபெற்ற ஹைதராபாத் படப்பிடிப்பை முடித்த கையோடு தனது நண்பர்களுடன் தனக்குப் பிடித்த பைக்கிலேயே வட இந்திய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.

கிட்டத்தட்ட 5000 கிலோ மீட்டர் தூரத்தை பைக்கிலேயே சுற்றி சிக்கிம் மாநிலம்வரையிலும் சென்று வந்திருக்கிறார். இந்த சூப்பர் ஸ்டார் ரேஞ்சிலும் தனக்குப் பிடித்தமான ஒரு விஷயத்தை அவர் தொடர்ந்து செய்து வருவதைப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News