Wednesday, April 10, 2024

கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும் தமிழை காப்பாத்தினாங்க! : வைரமுத்து

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் பாடலாசிரியர் வைரமுத்து. அந்த வகையில் தற்போது ராஜ பார்வை படத்தின் போது கமலுடன் உரையாடிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “அந்தி மழை பொழிகிறது எழுதிக்கொண்டிருந்த நேரம். கமல்ஹாசனுக்கும் எனக்கும்
நேர்ந்த உரையாடல்:

‘சிப்பியில் தப்பிய நித்திலமே…
நித்திலம் என்றால் என்ன?’
‘முத்து’
‘புரியுமா?’
‘அறுபதுகளில் புரிந்தது
எண்பதுகளில் புரியாதா?’
‘அப்போதே வந்திருக்கிறதா;
எந்தப் பாட்டில்?’
‘எம்.ஜி.ஆர் பாட்டில்:
சின்ன இடையே சித்திரமே
சிரிக்கும் காதல் நித்திலமே’

(சிறிய சிந்தனைக்குப் பிறகு)
‘சரி சரி’
# கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும்
தமிழைக் காப்பாற்றினார்கள்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இரு பாடல்களின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News