Friday, September 20, 2024

‘உயிர் தமிழுக்கு’!: உதயநிதியுடன் மோதும் அமீர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி முக்கிய வேடத்தில் தோன்றுகின்றனர்.

படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

பாடல்களை பா.விஜய் எழுத, வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த மாத இறுதியில் பக்ரீத் பண்டிகைக்கு இந்தப்படத்தை வெளியிடும் விதமாக படக்குழுவினர் ரிலீஸ் சம்பந்தப்பட்ட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.

படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டு உள்ளது.அதே போல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மாமன்னன் திரைப்படமும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 28ல் வெளியாகிறது.

இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க, உதயநிதி, வடிவேலு உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.

இதனால், உயிர் தமிழுக்கு படம் ஏற்கனவே திட்டமிட்டபடி பக்ரீத் பண்டிகைக்கு வெளியாகுமா என்கிற புதிய கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து உயிர் தமிழுக்கு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம்பாவா, “தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் மட்டுமல்ல, சென்டிமென்ட்டாகவும் இந்தப்படத்தை பக்ரீத் பண்டிகை தினத்தில் வெளியிடுவதில் உறுதியாக இருகிறேறேன்.மாமன்னன் படம் அரசியலை சீரியஸாக பேசுகிறது என்றால் உயிர் தமிழுக்கு படம் இன்னொரு விதமாக நையாண்டி கலந்து அரசியலை பேச வருகிறது. அந்தவகையில் இந்த இரண்டு படங்களுமே ஆரோக்கியமான போட்டியுடன் ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி வரவழைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News