Thursday, April 11, 2024

“அக்கறைகாட்டிய உதயநிதி ஸ்டாலின்” ; வசுந்தரா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில்  நடித்த வசுந்தரா, தொடர்ந்து சமுத்திரக்கனி, சீனுராமசாமி போன்ற இயக்குநர்களின் படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

தற்போது, இவர் நடித்துள்ள கண்ணை நம்பாதே மற்றும் தலைக்கூத்தல் ஆகிய  திரைப்படங்கள்  விரைவில் வெளியாக  உள்ளன.

இது குறித்து இவர் கூறும்போது, “இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு.மாறனின் அடுத்த படம் கண்ணே கலைமானே. இதில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.   இந்த படத்தில் உதயநிதிக்கும் எனக்கும் விறுவிறுப்பான  காட்சிகள் இருக்கின்றன. கண்ணே கலைமானே படத்தில் பார்த்ததுபோலத்தான் எந்த பந்தாவும் இல்லாமல் பழகினார்.

 சண்டைக்காட்சிகளின்போது யாருக்கும் அடிபட்டுவிடக் கூடாது என உதயநிதி கவனம் எடுத்துக் கொண்டதை மறக்க முடியாது.  

அதேபோல லென்ஸ் படத்தை இயக்கிய ஜேபி (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்) டைரக்ஷனில் தற்போது தலைக்கூத்தல் என்கிற படத்தில் நடித்துள்ளேன்.

சில கிராமங்களில் வயதான உடல்நலம் பாதிக்கப்பட்ட பெரியவர்களை தலைக்கூத்தல் என்கிற முறையில் நடத்தும் நடைமுறை உள்ளது.   இதன் மூலம் அவர்கள் வலி இல்லாமல் மரணிப்பார்களாம். அதை மையப்படுத்திதான் இப்படம் உருவாகி உள்ளது.

இதுதவிர லட்சுமி நாராயணன் என்பவர் இயக்கத்தில் திரில்லர் ஜானரில் உருவாகும் படத்தில் நடிக்கிறேன்” என்கிறார் வசுந்தரா.

- Advertisement -

Read more

Local News