மறைந்த புகழ் பெற்ற பாடகர் டி.எம்.எஸ். குறித்து அவரது மகன் பால்ராஜ் சிலாகித்து கூறினார். அப்போது அவர் கூறியதாவது:
“என்னுடைய தாயார் சுமித்ரா மீது அப்பா மிகுந்த அன்பு வைத்திருந்தார். அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்து வாழ்ந்தனர். என் தந்தைக்காக தாயார் நிறைய தியாகங்களை செய்துள்ளார். எனவே அவர்களது காதல், அவரது பாடல்களில் எதிரொலிக்கும்.
அதே போல் சோகப்பாடலுக்கும் என் தந்தையின் வாழ்வில் வந்த ஒரு பெண்தான் காரணம். வாலிப வயதில் அந்த பெண்ணும், என் தந்தையும் காதலித்தனர். அந்த காதல் கைகூடாமல் போனதால், அந்த வருத்தம் தன்னை பாதித்ததாக என் தந்தை கூற கேட்டு இருக்கிறேன். அதன் பிரதிபலிப்புதான் சோகப்பாடலிலும் அவரை சாதிக்க வைத்து இருக்கிறது” என்றார் பால்ராஜ்.