Thursday, April 11, 2024

எங்களுக்கு இதுதான் கடவுள்: நடிகை நயன்தாரா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு  நாயகியாக அறிமுகமான லேடி சூப்பர் ஸ்டார்   நயன்தாரா. 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில்  தோல்வி,வெற்றி அனுபவம் என்று எத்தனையோ  வலிகளை  கடந்து விருதுகளை சுமந்து சாதனை பெண்ணாக சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ்  சிவனை  திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக  தனிப்பட்ட வாழ்க்கையிலும்  சிறப்பாக வாழ்ந்து வருகிறார் நயன்தாரா.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சில தினங்களுக்கு முன் நேரடி பேட்டி கொடுத்த  நயன்தாரா. என்னை போன்ற சினிமாவில் இருப்பவர்களுக்கு மிக முக்கியமானது மேக்கப். அதுதான் எங்களை வாழ வைக்கிறது. எங்களின் உணர்வுகளை  முகபாவனைகளை  கொண்டு வர உதவுகிறது.

சாப்பிட நேரமில்லாமல் இருந்திருப்போம் ஆனால் மேக்கப் போடாமல் இருந்ததில்லை.  கேமரா முன்னாடி நிற்கும் போது எங்களை நடிகையாக உணரவைப்பது இந்த மேக்கப் தான் ஆகவே அது எங்களுக்கு கடவுள் மாதிரி என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் நயன்தாரா.

- Advertisement -

Read more

Local News