நகைச்சுவை நடிகர்கள் என்றால் சாதாரணமாக நினைத்து விடுகிறோம். ஆனால் அவர்களிடம் கற்க வேண்டிய விசயம் நிறைய உண்டு.
நகைச்சுவை நடிகர் ஜெயமணி சமீபத்தில் ஒரு பேட்டியில், “சினிமாவில் நடிக்கும் ஆசை எனக்கு இருந்ததே இல்லை. சில நண்பர்கள், ‘நீ நகைச்சுவை நடிகர் செந்தில் மாதிரி இருக்கே.. சினிமாவுக்கு ட்ரை பண்ணு’ என்றார்கள். அப்போதும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
நண்பர்கள் கூறியதை, நான் பணிபுரிந்த அலுவலத்தில் சிலரிடம் கூறினேன். அங்கு சிலர், ‘நீ எல்லாம் சினிமவில நடிக்க முடியுமா.. உன் மூஞ்சியை கண்ணாடியில பார்த்திருக்கிறியா’ என்று மனம் புண்படும்படி கிண்டல் செய்தார்கள்.
அதன் பிறகுதான், திரைப்படங்களில் நடித்தே தீருவது என முடிவெடுத்தேன். மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு திரையில் தோன்றினேன். இப்போது 250 படம் வரை நடிச்சிருக்கேன்.
என்னை கிண்டல் செய்தவர்களை, நான் நடித்த படத்துக்கு அழைத்துச் செல்வேன். இப்போது அதிசயத்துப் பார்க்கிறார்கள். அவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை. அவர்கள் அப்படி பேசியிருக்காவிட்டால், நான் நடிக்கவே வந்திருக்க மாட்டேன். அவர்களுக்கு நன்றி” என்றார் ஜெயமணி.