The post வாழைப்பழ காமெடி காப்பிதான்: கங்கை அமரன் ஒப்புதல் appeared first on Touring Talkies.
]]>“ பலரும் அந்த வாழைப் பழம் காமெடி ரொம்ப அருமையாக இருக்கிறது. அதை நீங்கள் எப்படி யோசித்து எடுத்தீர்கள் தயவு செய்து சொல்லுங்கள் என கேட்பார்கள். அதற்கான விடையே இப்போது சொல்கிறேன். நாம் நமது முன்னோர்கள் இல்லாமல் எதையும் சொல்லவோ, செய்யவோ முடியாது. எனால் அவர்கள் நமக்கு நிறைய விஷயங்கள் விட்டுச் சென்று இருக்கிறார்கள்.
அப்படி தான் எனக்கும் , என் முன்னோர்கள் நிறைய விட்டுச் சென்று இருக்கின்றனர். நீங்கள் , ‘ தில்லானா மோகனாம்பாள் ‘ படம் பார்த்து இருப்பீர்கள். அதை போலே தான் கரகாட்டக்காரன் படமும். அந்த படத்தில் கதாநாயகன் நாதஸ்வரம் வாசிப்பவராகவும் , நாயகி பரத கலைஞராகவும் நடித்து இருப்பார்கள்.
இருவருமே நடன கலைஞராக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து கரகாட்டக்காரன் படத்தை எடுத்து முடித்தேன். நான் வாழைப்பழம் நகைச்சுவையைச் சிறு வயதில் , மலையாள வெளியான படத்தில் பார்த்து ரசித்து இருக்கிறேன்..
அதனால் அது என் கற்பனையில் உருவாகவில்லை . எனக்கு அந்த வெற்றி உழைக்காமல் கிடைத்தது” என்று கங்கை அமரன் கூறினார்.
இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான சினிமா தகவல்களை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post வாழைப்பழ காமெடி காப்பிதான்: கங்கை அமரன் ஒப்புதல் appeared first on Touring Talkies.
]]>The post வடிவேலு என் வாழ்க்கையை கெடுத்தார்!: நடிகை பிரேம பிரியா குமுறல்! appeared first on Touring Talkies.
]]>இது குறித்து அவர், “கொரோனாவால் முதலில் என் அக்காவை பறி கொடுத்தேன், அதன் பின் பத்தே நாளில் என் அப்பா காலமானார். இரண்டு மாதம் கழித்து என் கணவர் சர்க்கரை வியாதி முற்றி, உடல் உறுப்புகள் செயல் இழந்து காலமானார். அப்பாவின் மறைவுக்கு பின் என் கணவர் தான் எல்லாம் என்று நினைத்து இருந்தேன். அவர் போன பிறகு என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை.
பட வாய்ப்புகள் இல்லாததால் வேறு ஏதாவது வேலை செய்யலாம் என்று நான் சென்றபோது சரியான வேலை கிடைக்கவில்லை.
என் கஷ்டத்தை சொல்லி அழக்கூட ஆள் இல்லாததால் நான் பல மீடியாக்களில் சொல்லி அழுதேன்.
ஆனால், இப்போது நான் நன்றாக இருக்கிறேன். பல படங்களில் நடித்து வருகிறேன்.
நான் கஷ்டப்பட்ட போது எனக்கு சூரி பண உதவி செய்தார். மற்ற நடிகர்களும் எனக்கு உதவி செய்தார்கள்.
ஆனால், என் வளர்ச்சியை தடுத்ததே வடிவேலுதான். பல வாய்ப்புகள் என்னை தேடி வந்தது. ஆனால், வடிவேலு இந்த பெண்ணு வேண்டாம் என்று சொல்லி விடுவார். இதனால், பல நல்ல படங்களின் வாய்ப்பு பறிபோனது. மேலும், வடிவேலு பற்றி நான் மீடியாவில் பேசியதால், ஒரு இயக்குநர் என்னை தொலைபேசியில் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட சொன்னார். ஆனால் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்” என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
The post வடிவேலு என் வாழ்க்கையை கெடுத்தார்!: நடிகை பிரேம பிரியா குமுறல்! appeared first on Touring Talkies.
]]>The post 20 வருட காமெடி..மீண்டும் ரஜினி படத்தில்! appeared first on Touring Talkies.
]]>ஆம்…
கோமல் சுவாமிநாதன் எழுதிய நாடகத்தை தழுவி நவாப் நாற்காலி படம் எடுக்கப்பட்டிருந்தது. ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்த இப்படம் 1972 ஆம் ஆண்டு வெளியானது.படத்தில் ஒரு காட்சியில் விசிட்டிங் கார்டில் நேசமணி பொன்னையா என்ற பெயரில் இருக்கும். அதை ரமா பிரபா, நாசமா நீ போனியா என்று வாசிப்பார்.
இதே காமெடியை காமெடியை 20 வருடங்கள் கழித்து 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினியின் அண்ணாமலை படத்தில் ஜனகராஜ் பேசி இருப்பார்.
The post 20 வருட காமெடி..மீண்டும் ரஜினி படத்தில்! appeared first on Touring Talkies.
]]>The post “வடிவேலு காமெடியால தான் படம் ஓடல!”: சுந்தர் சி appeared first on Touring Talkies.
]]>இது குறித்து அவர், “தலைநகரம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்குக் காரணம் இருக்கிறது. அந்தப் படம் மொத்தமே இரண்டு மணி நேரம்தான். ஆனால், அதில் 45 நிமிடம் வரும் காமெடி காட்சிகள் வரும். வடிவேலுவின் காமெடி நன்றாக இருந்ததால் மற்ற காட்சிகளை சுருக்க வேண்டியதாக இருந்தது. படத்தின் தோல்விக்கு இதுதான் காரணம்” என்றார்.
The post “வடிவேலு காமெடியால தான் படம் ஓடல!”: சுந்தர் சி appeared first on Touring Talkies.
]]>The post வடிவேலு நடிக்க மறுத்த காமெடி: ஆனா சூப்பர் ஹிட்! appeared first on Touring Talkies.
]]>ஆனால் இந்த காமெடி ஷூட் செய்யும்போது, ‘இது என்ன அக்கா என்றெல்லாம் சொல்றீங்க இது வேண்டாம்’ என்று இயக்குனர் சுந்தர்சியிடம் வடிவேலு கூறியுள்ளார். அதை கேட்ட சுந்தர்சி, ‘வடிவேலு உனக்கு அக்கா இருக்கா, எனக்கு ரெண்டு அக்கா இருக்கு தைரியமா நடி நல்லா இல்லனா சித்தினு மாத்திக்கலாம்’ என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு வேண்டா வெறுப்பாக நடித்த வடிவேலுவுக்கு இந்த காமெடி காட்சி ஒரு அடையாளமாகவே மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து இயக்குனர் சுந்தர்.சி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளா.
The post வடிவேலு நடிக்க மறுத்த காமெடி: ஆனா சூப்பர் ஹிட்! appeared first on Touring Talkies.
]]>The post ரஜினி செய்த குறும்பு! appeared first on Touring Talkies.
]]>இதில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக மாதவி நடித்தார்.
படப்பிடிப்பு தளத்தில் மாதவியிடம், ரஜினி, “இவர் புதிதாக லண்டனில் இருந்து வந்த ப்ரொபசர் இவர்தான் எல்லாருக்கும் நடிப்பு கற்றுத் தருவார்” என சத்யராஜை காண்பித்து சொல்லியிருக்கிறார்.
இதை நம்பிய நடிகை மாதவி சத்யராஜிடம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்க… சத்யராஜூக்கோ அப்போது அவ்வளவாக ஆங்கிலம் வராத நிலையில் அவர் திணற… ரஜினி வாய்விட்டுச் சிரித்து இருக்கிறார்.
பிறகு உண்மை தெரிந்து மாதவியும், சத்யராஜும் சேர்ந்து சிரித்திருக்கிறார்கள்.
The post ரஜினி செய்த குறும்பு! appeared first on Touring Talkies.
]]>The post காமெடி எனக்கு வராது: டெல்லி கணேஷ் appeared first on Touring Talkies.
]]>அவ்வை சண்முகி படத்தில் நடித்தது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் இப்படி முழு படத்தில் காமெடியனாக நடித்தது இல்லை. ஒரு நாள்,இரண்டாவது நாள் பார்த்தேன் அப்புறம் எனக்கு பயம் வந்து விட்டது.
கிரேசி மோகனிடம் எத்தனை சீன் இருக்கு என்று கேட்டேன். படம் முழுவதும் நீ வருகிறாய் என்றார்.
கமலிடம் சென்று நீங்கள் நல்ல காமெடியன் யாரையாவது வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு முழு படத்தையும் முடிக்க முடியுமா தெரியவில்லை என்றேன்.
உங்களால் முடியும் நீங்கதான் பன்னனும் என்று கமல் தைரியம் கொடுத்தார் நடித்தேன் நல்ல பெயர் கிடைத்தது என்றார் டெல்லி கணேஷ்.
The post காமெடி எனக்கு வராது: டெல்லி கணேஷ் appeared first on Touring Talkies.
]]>The post தெரிஞ்சிக்க வேண்டிய வாழ்க்கைத் தத்துவம்: காமெடியன் முத்துக்காளை appeared first on Touring Talkies.
]]>அந்த படத்தில் ஒரு கோர்ட் சீனில் கும்பலில் ஒரு வழக்கறிஞராக நிற்க வாய்ப்பு அளித்தார். என்னைப்போலவே வந்த இன்னொரு ஜூனியர் ஆர்டிஸ்ட்.. நீ எல்லாம் லாயர் வேசத்துக்கு வந்துட்டியா என விரட்டினார். கேமரா முன் என்னை நிற்க விடவே இல்லை. இதனால் கடைசியில் போய் நின்றேன்.
இதைப் பார்த்த நாராயண மூர்த்தி சார்,, முன்னால வந்து நில்லு என்றார். அதன் பிறகே கேமரா முன் வந்து நின்றேன்.
பிறகு படிப்படியாக வாய்ப்புகள் கிடைக்க ஓரளவு வண்டி ஓடுகிறது. ஆனால் என்னை விரட்டிய அந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் நடிகர், இன்னும் பழைய கைலி, சட்டையோடு அலைந்துகொண்டு இருக்கிறார்.
ஒரு முறை வழியில் என்னைப் பார்த்தவர், ‘பரவாயில்லையே..எப்படியே முன்னேறி வந்துட்டே’ என்றார்.
இதைத்தான் வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள்.. ஆகவே அடுத்தவரை தாழ்த்தி நடத்துவது தவறு” என்றார் முத்துக்காளை.
The post தெரிஞ்சிக்க வேண்டிய வாழ்க்கைத் தத்துவம்: காமெடியன் முத்துக்காளை appeared first on Touring Talkies.
]]>The post முனீஸ் காந்தை அதிர வைத்த விக்கிபீடியா! appeared first on Touring Talkies.
]]>இவர், “திருமணத்துக்காக பெண் தேடித் தேடி ஒரு வழியா நிச்சயதார்த்தம் முடிஞ்ச நேரம். பொண்ணுகிட்டே இருந்து போன்.. ‘உங்களுக்கு ஐம்பது வயசாமே..’னு கேட்டார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ‘அய்யோ.. எனக்கு 37தான் ஆவுது’னு சொன்னேன்.
அவரு, ‘விக்கிபீடியாவில அப்படித்தான் போட்டிருக்கு’னு சொன்னார். அதில பார்த்தா அப்படித்தான் இருந்தது. உடனே நான் அவர்கிட்ட என்னோட பள்ளி டிசியை காட்டி உண்மையை நிரூபிச்சேன்..” என்றார் முனீஸ் காந்த்.
The post முனீஸ் காந்தை அதிர வைத்த விக்கிபீடியா! appeared first on Touring Talkies.
]]>The post அந்த சம்பவம்தான் காரணம்! : தன்னம்பிக்கை ஜெயமணி appeared first on Touring Talkies.
]]>நகைச்சுவை நடிகர் ஜெயமணி சமீபத்தில் ஒரு பேட்டியில், “சினிமாவில் நடிக்கும் ஆசை எனக்கு இருந்ததே இல்லை. சில நண்பர்கள், ‘நீ நகைச்சுவை நடிகர் செந்தில் மாதிரி இருக்கே.. சினிமாவுக்கு ட்ரை பண்ணு’ என்றார்கள். அப்போதும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
நண்பர்கள் கூறியதை, நான் பணிபுரிந்த அலுவலத்தில் சிலரிடம் கூறினேன். அங்கு சிலர், ‘நீ எல்லாம் சினிமவில நடிக்க முடியுமா.. உன் மூஞ்சியை கண்ணாடியில பார்த்திருக்கிறியா’ என்று மனம் புண்படும்படி கிண்டல் செய்தார்கள்.
அதன் பிறகுதான், திரைப்படங்களில் நடித்தே தீருவது என முடிவெடுத்தேன். மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு திரையில் தோன்றினேன். இப்போது 250 படம் வரை நடிச்சிருக்கேன்.
என்னை கிண்டல் செய்தவர்களை, நான் நடித்த படத்துக்கு அழைத்துச் செல்வேன். இப்போது அதிசயத்துப் பார்க்கிறார்கள். அவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை. அவர்கள் அப்படி பேசியிருக்காவிட்டால், நான் நடிக்கவே வந்திருக்க மாட்டேன். அவர்களுக்கு நன்றி” என்றார் ஜெயமணி.
The post அந்த சம்பவம்தான் காரணம்! : தன்னம்பிக்கை ஜெயமணி appeared first on Touring Talkies.
]]>