சுந்தர் சி நடித்த தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தை முகவரி தொட்டி ஜெயா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வி இசட் படங்களை இயக்கி வருகிறார். இதிலும் சுந்தர் சி, நாயகனாக நடிக்கிறார்.
இது குறித்து அவர், “தலைநகரம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்குக் காரணம் இருக்கிறது. அந்தப் படம் மொத்தமே இரண்டு மணி நேரம்தான். ஆனால், அதில் 45 நிமிடம் வரும் காமெடி காட்சிகள் வரும். வடிவேலுவின் காமெடி நன்றாக இருந்ததால் மற்ற காட்சிகளை சுருக்க வேண்டியதாக இருந்தது. படத்தின் தோல்விக்கு இதுதான் காரணம்” என்றார்.