Wednesday, April 10, 2024

வடிவேலு என் வாழ்க்கையை கெடுத்தார்!: நடிகை பிரேம பிரியா குமுறல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நகைச்சுவை நடிகை பிரேம பிரியா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “வடிவேலுதான் என் வாழ்க்கையை கெடுத்தார்” என கூறி அதிரவைத்து உள்ளார்.

இது குறித்து அவர், “கொரோனாவால் முதலில் என் அக்காவை பறி கொடுத்தேன், அதன் பின் பத்தே நாளில் என் அப்பா காலமானார். இரண்டு மாதம் கழித்து என் கணவர் சர்க்கரை வியாதி முற்றி, உடல் உறுப்புகள் செயல் இழந்து காலமானார். அப்பாவின் மறைவுக்கு பின் என் கணவர் தான் எல்லாம் என்று நினைத்து இருந்தேன். அவர் போன பிறகு என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை.

பட வாய்ப்புகள் இல்லாததால் வேறு ஏதாவது வேலை செய்யலாம் என்று நான் சென்றபோது  சரியான வேலை  கிடைக்கவில்லை.

என் கஷ்டத்தை சொல்லி அழக்கூட ஆள் இல்லாததால் நான் பல மீடியாக்களில் சொல்லி அழுதேன்.

ஆனால், இப்போது நான் நன்றாக இருக்கிறேன். பல படங்களில் நடித்து வருகிறேன்.

நான் கஷ்டப்பட்ட போது எனக்கு சூரி பண உதவி செய்தார். மற்ற நடிகர்களும் எனக்கு உதவி செய்தார்கள்.

ஆனால், என் வளர்ச்சியை தடுத்ததே வடிவேலுதான். பல வாய்ப்புகள் என்னை தேடி வந்தது. ஆனால், வடிவேலு இந்த பெண்ணு வேண்டாம் என்று சொல்லி விடுவார். இதனால், பல நல்ல படங்களின் வாய்ப்பு பறிபோனது. மேலும், வடிவேலு பற்றி நான் மீடியாவில் பேசியதால், ஒரு இயக்குநர் என்னை தொலைபேசியில் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட சொன்னார். ஆனால் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்” என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News