Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“நடுங்க வைத்த இரவு!”: சுஷ்மா நாயர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டி.வி. தொடர்களில் வில்லியாக நடித்து ரசிகர்களை மிரட்டி வரும் சுஷ்மா நாயர் தான் மிகுந்த பயந்த சுபாவம் என சொல்லி இருக்கிறார். இது குறித்த ஒரு சம்பவத்தையும் தெரிவித்து இருக்கிறார்.

“படப்பிடிப்பு ஒன்றுக்காக வெளியூரில் தங்க வேண்டி இருந்தது. படப்பிடிப்பு தளத்தை ஒட்டியே தனி அறை ஒதுக்கி இருந்தார்கள்.  இரவில் சலங்கை அணிந்து யாரோ நடமாடுவது போன்ற ஒலி. பயந்து நடுங்கிவிட்டேன். பிறகு மற்றவர்களை அழைத்து விசயத்தைச் சொன்னேன். அவர்களுக்கும் சலங்கை ஒலி கேட்டது.

பிறகு பார்த்தால்.. பக்கத்தில் மேற்கூரையாக டின்ஷீட் போட்டு இருக்கிறார்கள். அதில் தென்னை மரத்தின் கீற்று (இலை) காற்றில் ஆடி அப்படி சத்தம் கேட்டிருக்கிறது.. வாழ்க்கையில் அப்படி நான் பயந்ததே இல்லை” என்கிறார் சுஷ்மா நாயர்.

- Advertisement -

Read more

Local News