Saturday, April 13, 2024

ஜீவா நடிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 91-வது படம்…!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென் இந்திய சினிமா துறையில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு பெரும் வரலாறும்,  பெருமையும் இருக்கிறது.

தென்னக சினிமாவிற்கு  பல தரமான கலைஞர்களை அந்நிறுவனம் தந்திருக்கிறது. குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் வகையிலான படைப்புக்களை, உலக ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம், தொடர்ந்து தந்து வருகிறது. பெரும் வெற்றிப் பயணத்தை பல தசாப்தங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் இந்நிறுவனம் ரசிகர்களை எந்த வகையிலும் ஏமாற்றாமல், அவர்கள் கொண்டாடும் படைப்புகளை,  தரமான வடிவத்தில் தருவதில் முதன்மையாக இருக்கிறது.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் R.B.சௌத்ரி தற்போது இந்நிறுவனத்தின் சார்பில் ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் ஜீவா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். காஷ்மீரா பர்தேஷி மற்றும் ப்ரயாகா நாக்ரா இருவரும் இப்படத்தின் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களோடு V.T.V.கணேஷ், சித்திக், ஷா ரா மற்றும் பல முக்கிய நடிகர்களும் நடிக்கவுள்ளார்கள்.

இசை – ஜிமிக்கி கம்மல்’ புகழ் ஷாநவாஸ் ரெஹிமான், ஒளிப்பதிவு – சித்தார்த்  ராமசுவாமி, படத் தொகுப்பு – ராகவேந்திரன் எனும் ்ரீகாந்த், சண்டை இயக்கம் – R.சரவணன், கலை இயக்கம் – R.மோகன், உடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர், உடைகள் – கணேஷ், ஒப்பனை – சண்முகம், புகைப்படங்கள் – அன்புராஜ், போஸ்டர் டிசைன்ஸ் – கபிலன், தயாரிப்பு மேலாளர் – நாகராஜ், தயாரிப்பு வடிவமைப்பு – ்ரீநாத்.R.

இப்படத்தை  பிரபல இயக்குநர் சசியின் உதவியாளரான சந்தோஷ் ராஜன் இயக்குகிறார்.

இந்தப் படத்திற்கு இன்னமும் பெயர் சூட்டப்படாததால் தற்போதைக்கு இத்திரைப்படம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு எண் 91’ எனக் குறிப்பிடப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு, தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குழு கலந்து கொள்ள, எளிமையான பூஜையுடன் நேற்று காலை(அக்டோபர் 21, 2020) தொடங்கியது.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் சந்தோஷ் ராஜன் பேசும்போது, “தென்னிந்திய சினிமாவின் மிகப் பெரிய ஆளுமைகளுள் ஒருவராக திகழும் R.B.சௌத்ரி  அவர்களின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன், இயக்குநராக எனது திரைப் பயணம் துவங்குவது, எனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியையும், பெருமையும் அளிக்கிறது.

பல பெரும் கலைஞர்களுக்கு, இயக்குநர்களுக்கு திரையுலகில் திறவுகோலாக,  சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மூலம் வாய்ப்பளித்து, உருவாக்கிய பெருமை கொண்டவர் R.B.சௌத்ரி அவர்கள். அப்படியான நிறுவனத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் ஆசிர்வாதம்.

அதிலும் எனக்கு இது இரட்டை சந்தோஷ தருணம். ஜீவா அவர்கள் தமிழ் சினிமாவின் அரிய திறமைகளில் ஒருவர். அவர் மிக ஆழமான படைப்புகளில் திறமையான நடிப்பை தந்தும், கமர்ஷியல் படங்களில் எளிதாக ரசிகர்களை கவர்ந்தும் சாதனை படைத்தவர். மாஸ் மற்றும் க்ளாஸ் எனும் இரண்டு திறமையும் கொண்டவர் அவர்.

இயக்குநர் சசி அவர்களிடம் டிஷ்யூம்’ படத்தில் உதவியாளராக பணிபுரிந்தபோது படப்பிடிப்பில் நடிகர் ஜீவாவின் நடிப்பு திறமையை கண்டு வியந்திருக்கிறேன். அப்படத்தில் அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது.

ஜீவா ஸார், இயல்பிலேயே  மிகவும் எளிமையான, கலகலப்பான மனிதர். சுற்றியுள்ளவர்களை தன் கலகலப்பான குணத்தால் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்.

எனது கதையையும் அப்படியானதொரு கதாப்பாத்திரத்தை கொண்டிருப்பதால் அவரை அணுகினேன். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து, இந்திய அளவிலான முக்கிய நடிகராக மாறிவிட்ட போதிலும், அவர் அதே எளிமையுடனேதான் பழகுகிறார். இதுதான் எந்த ஒரு இயக்குநரும் அவருடன் பணிபுரிய விரும்பும் குணமாக இருக்கிறது.

இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரும் ஆசிர்வாதம். மேலும் இப்படம் தரப் போகும்  மிகச் சிறந்த அனுபவங்களுக்காக காத்திருக்கிறேன்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News