Join our community of SUBSCRIBERS and be part of the conversation.

To subscribe, simply enter your email address on our website or click the subscribe button below. Don't worry, we respect your privacy and won't spam your inbox. Your information is safe with us.

News

Company:

Wednesday, March 12, 2025

Touring Talkies

சென்சார் போர்ட் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்ட நாகேஷ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்சார் போர்டில், படக்காட்சிகள் சிக்குவது காலம் காலமாகவே இருந்து வருகிறது. இது குறித்த ஒரு சம்பவத்தை பத்திரிகையாளர் மணி பகிர்ந்துகொண்டார்.

பி.மாதவன் இயக்கத்தில் சிவாஜி, தேவிகா உள்ளிட்ட பலரும் நடித்து 1963ம் வருடம் வெளியான திரைப்படம் அன்னை இல்லம்.  இந்த படத்தில் திக்குவாய் உள்ள கதாபாத்திரத்தில் நாகேஷ் நடித்திருந்தார். படம் சென்சாருக்கு போனது. அப்போது சவுத்ரி எனும் சென்சார் அதிகாரி இருந்தார். அவர் இந்த படத்தை பார்த்துவிட்டு ‘படம் நன்றாக இருக்கிறது. ஆனால், நாகேஷ் நடித்துள்ள காமெடி காட்சிகளை மொத்தமாக வெட்டிவிடுங்கள்’ என சொன்னார். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

நாகேஷை வர சொல்லுங்கள் நான் பார்க்க வேண்டும் என சாஸ்திரி சொல்ல நாகேஷ் அவரை பார்க்க சென்றார். அவரின் ‘நாகேஷ் நானும் உங்கள் ரசிகர்தான். ஆனால், கொஞ்சம் யோசித்து பாருங்கள். வாய் பேச முடியாதவர்கள், திக்குவாய் உள்ளவர்கள் இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்தால் அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும். அவர்களை அசிங்கப்படுத்துவது போல் இருக்கிறது உங்கள் காமெடி. நீங்கள் இப்படியெல்லாம் நடிக்க கூடாது’ என அறிவுரை சொல்ல நாகேஷ் ‘உண்மைதான். தெரியாமல் செய்துவிட்டேன். இனிமேல் ஜாக்கிரதையாக இருப்பேன்’ என சொன்னாராம். அதன்பின் நாகேஷ் நடித்த சில காட்சிகளை மட்டும் வெட்டிவிட்டு சென்சார் சான்றிதழ் கொடுத்தாராம் அந்த அதிகாரி.

- Advertisement -

Read more

Local News

Hide WhatsApp Form
<p>How can I help you? :)</p>