Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

தயாரிப்பாளருக்காக கடன் தொகையை ஏற்றுக் கொண்ட சிவகார்த்திகேயன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்ச் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு படத்தின் முடிவிலும் சில பிரச்சினைகள் அவரைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

அது கடன் பிரச்சினை.

24 AM Productions நிறுவனத்தின் சார்பில் சிவகார்த்திகேயனை வைத்து ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’, ‘சீமராஜா’ ஆகிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா இப்போது மிகுந்த கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.

இவை அனைத்துமே சிவகார்த்திகேயன் நடித்த மேற்கண்ட மூன்று படங்களுக்காக வாங்கப்பட்ட கடன்கள்தான். இப்போதைய கடன் தொகையில் அசலைவிடவும் வட்டி தொகையே அதிகமாம். வருடங்கள் அதிகமானதால் வட்டியும் அதிகமாகியிருக்கிறது.

இப்போது சிவகார்த்திகேயனும் அடுத்தடுத்து வெளி நிறுவனங்களுக்கு படம் செய்யத் துவங்கிவிட்டதால் இந்தக் கடன்களை எப்படி அடைப்பது என்பது தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவின் முன்னாள் நிற்கும் மிகப் பெரிய கேள்வி.

சமீபத்தில் இது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆர்.டி.ராஜா தன்னை வைத்து தயாரித்த திரைப்படங்களுக்காக பெற்ற கடன் தொகை முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் அதற்கு நானே முழுப் பொறுப்பு என்றும் சிவகார்த்திகேயன் சொல்லிவிட்டாராம்.

தன்னால் ஒரு தயாரிப்பாளர் நஷ்டப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் சிவகார்த்திகேயன் செய்த இந்தச் செயல் பாராட்டுக்குரியது என்கிறார்கள் மூத்தத் தயாரிப்பாளர்கள்.

- Advertisement -

Read more

Local News