Thursday, April 11, 2024

காவல்துறையில் பணியாற்றுபவர் எழுதிய கதையில் உருவான ‘சினம்’ படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Movie Slides Pvt. Ltd நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஜயகுமாரின் தயாரிப்பில், இயக்குநர் G.N.R.குமரவேலன் இயக்கத்தில்,  அருண் விஜய், பாலக் லால்வானி நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம் சினம்’.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை கமலா தியேட்டரில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் பல திரையுலக பிரபலங்களும், படத்தின் குழுவினரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் படத்தின் இயக்குநரான G.N.R.குமரவேலன் பேசும்போது, “என்னுடைய படத்திற்கு பாராட்டுகளையும், நான் செய்த தவறுகளுக்கு விமர்சனங்களையும் தொடர்ந்து கொடுத்து வரும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி.

இந்தப் படத்தின் கதையாசிரியர் உண்மையாகவே காவல் துறையில் பணிபுரிகிறார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டு, என்னுடைய முந்தைய படங்கள் பற்றி யோசிக்காமல் அருண் விஜய் ஓகே சொன்னார்.

விஜய்குமார் சார் உடன் பணிபுரிவது எனக்கு முதலில் பயத்தை கொடுத்தது. அதன் பிறகு மகிழ்ச்சியாக இருந்தது. நடிகரே இந்த படத்தின் தயாரிப்பாளராக அமைந்தது பெரிய பலமாக அமைந்தது.

கோவிட் காலத்தில் நம்பிக்கை இழக்க கூடிய தருணத்தில், எங்களுக்கு நம்பிக்கை அளித்தவர் விஜயகுமார் சார். இந்த படத்தை ஒடிடியில் வெளியிடாமல், தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று அருண் விஜய் உறுதியாக இருந்தார். இந்த படம் கண்டிப்பாக பேசப்பட கூடிய படமாக இருக்கும்.” என்றார்.

- Advertisement -

Read more

Local News