Saturday, April 13, 2024

“அப்பா கட்சியில் சேரக் கூடாது…” – தனது ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் பெயரில் நான்தான் கட்சி ஆரம்பிக்க தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன்…” என்று நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில்.. நடிகர் விஜய் இதற்கு உடனடியாக எதிர் விளக்கமளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இதுதான் :

“இன்று என்‌ தந்‌தை திரு.எஸ்‌.ஏ.சந்திரசேகர்‌ அவர்கள்‌ ஓர்‌ அரசியல்‌ கட்சியை ஆரம்பித்துள்ளார்‌ என்பதை ஊடகங்களின்‌ வாயிலாக அறிந்தேன்‌. அவர்‌ தொடங்கியுள்ள கட்சிக்கும்,‌ எனக்கும்‌ நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும்‌ இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும்‌ பொதுமக்களுக்கும்‌ தெரிவித்துக் கொள்கிறேன்‌.

இதன்‌ மூலம்‌ அவர்‌ அரசியல்‌ தொடர்பாக எதிர்காலத்தில்‌ மேற்கொள்ளும்‌ எந்த நடவடிக்கைகளும்‌ என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்‌.

மேலும்‌ எனது ரசிகர்கள்‌, எனது தந்‌தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில்‌ இணைத்துக் கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம்‌ என கேட்டுக் கொள்கிறேன்‌. அக்கட்சிக்கும்‌ நமக்கும்‌ நமது இயக்கத்திற்கும்‌ எவ்வித தொடர்பும்‌ கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்‌.

மேலும்‌ என்‌ பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய்‌ மக்கள்‌ இயக்கத்தின்‌ பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும்‌ விவகாரங்களில்‌ ஈடுபட்டால்‌ அவர்கள்‌ மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்பதையும்‌ தெரிவித்துக் கொள்கிறேன்‌…”

இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News