Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

சுட்டுக்கொண்ட எம்ஜிஆர் – எம்.ஆர்.ஆர்.: ஒரே அறையில் சிகிச்சை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விலகாத மர்மங்களில் ஒன்று எம்.ஜி.ஆர். – எம்.ஆர்.ராதா துப்பாக்கிச் சூடு சம்பவம். நெருங்கிய நண்பர்களாக இருந்த அவர்கள் இருவரும் திடீரென தாக்குதலில் ஈடுபட்டது ஏன் என்று பலருக்கும் இப்போது வரை குழப்பமாக இருக்கிறது.

இது பற்றி எம் ஆர் ராதாவின் மகன் ராதாரவி ஒரு முறை பேசினார்.

சம்பவம் நடந்த அன்று எம் ஆர் ராதாவை பார்ப்பதற்காக அவருடைய மனைவியும், 14 வயதே ஆன ராதாரவியும் மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றனர். அங்கு எம்ஜிஆரின் ரசிகர்கள் தீவிர ரகளையில் ஈடுபட்டதால் சுவர் ஏறிக்குதித்து மருத்துவமனை உள்ளே அவர்கள் நுழைந்துள்ளனர்.

விஷயத்தை கேள்விப்பட்ட சிவாஜியும் பதைபதப்புடன் அங்கு ஓடோடி வந்திருக்கிறார். அப்போது அவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு நிற்கும் வகையில் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.  டுகாயம் அடைந்த எம்ஜிஆர் மற்றும் எம் ஆர் ராதா இருவருக்கும் ஒரே அறையில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.   நடுவில் ஒரே ஒரு ஸ்கிரீன் மட்டும் போடப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து இன்றும் மர்மம் விலகாதது ஆச்சரியம்தான்.

 

- Advertisement -

Read more

Local News