தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகிபாபு, கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் உருவாகி வரும் “ஜவான்” திரைப்படத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்பின் போது நடந்த ஒரு விசயம் குறித்து ஆச்சரியத்துடன் பகிர்ந்து கொண்டார் யோகி பாபு.
““ஜவான்” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பைக்குச் சென்றேன். அங்கே படப்பிடிப்புத் தளத்தில் ஷாருக் கான், என்னைப் பார்த்து, “வெல்கம் பேக் டூ பாலிவுட் ஆஃப்டர் 12 இயர்ஸ்” என சொல்லி வைத்து வரவேற்றார்.
எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது.
2013ம் வருடம், ஷாருக் கான், தீபிகா படுகோன் ஆகியோரின் நடிப்பில் பாலிவுட்டில் வெளிவந்த “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில், சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தேன்.
அதை நினைவு வைத்துத்தான் அப்படிச் சொல்லி இருக்கிறார் ஷாருக் கான்.
அவர் எவ்வளவு பெரிய நடிகர், சிறு கதாபாத்திரத்தில் நடித்த என்னையும் நினைவு வைத்திருக்கிறாரே என வியந்தேன்” என்று கூறியிருக்கிறார் யோகி பாபு.