சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள திரைப்படம் சாகுந்தலம். குணசேகர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய வேடமேற்று உள்ளார். அதிதிபாலன், கவுதமி, மதுபாலா, மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், அனன்யா நாகல்லா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். 70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், வசூல்ரீதியாக பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ரசிகர்களிடம் இருந்து எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொண்டு உள்ளது.
இந்த படத்தில் மேனகாவாக வேடமேற்று, மதுபாலா நடித்து உள்ளார். படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலிககாத நிலையில், அதுபற்றி நடிகை மதுபாலா பேட்டி ஒன்றை அளித்து உள்ளார்
“படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாதது வேதனை ஏற்பட்டு உள்ளது. படத்திற்காக இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அதிக உழைப்பை கொடுத்தனர். படம் உருவானதில் இருந்து, திரைக்கு வரும் வரை அவர்கள் தங்கள் உழைப்பை அதில் போட்டனர். படப்பிடிப்பு, டப்பிங் பணிகள் முடிந்த பின்னர் அவர்கள் ஓராண்டு முழுவதும் சி.ஜி.ஐ. எனப்படும் கணினி சார்ந்த பணிகளில் ஈடுபட்டனர். ஒரு படம் ஏன் வெற்றியடைகிறது என்றோ அல்லது தோல்வி காணுகிறது என்றோ ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாது.
பாகுபலி நல்ல படம் என்றபோதிலும், இந்த அளவுக்கு சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியடையும் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவேயில்லை” என்று கூறியுள்ளார்.