Friday, April 12, 2024

‘RRR’ படத்தின் 3-வது பாடல் வெளியீடு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Lyca Productions சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவும், DVV Entertainment சார்பில் தானய்யாவும் இணைந்து வழங்கும், இந்திய திரைத் துறையில் மொழி மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் இந்த வருடத்தின் மிகப் பிரமாண்டமான படைப்பு RRR(இரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம்.

‘பாகுபலி’ திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இந்த ‘RRR’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.

இந்திய திரைத்துறையின் பல மொழிகளில் இருந்தும் பெரும் நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். பாலிவுட் நாயகி ஆலியா பட், நாயகன் அஜய் தேவ்கன், நடிகர் சமுத்திரக்கனி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன. இன்று சென்னையில், இப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் விழாவில் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் இயக்குநர் S.S.ராஜமௌலி, Lyca Productions சார்பில் தமிழ்குமரன், தயாரிப்பாளர் N.V.பிரசாத், DVV Entertainment சார்பில் தயாரிப்பாளர் தானய்யா கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் Lyca Productions சார்பில் தமிழ்குமரன் பேசும்போது, “பிரம்மாண்டமான இயக்குநர் ராஜமௌலி உடன் எங்கள் நிறுவனம் இணைந்திருப்பதில் எங்களுக்குப் பெருமைதான். உலகளவில் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பாக இந்த RRR திரைப்படம் இருக்கும். இது நட்பு ரீதியிலான சங்கமம். இன்னும் பல படைப்புகளில் இது தொடருமென நம்புகிறோம்…” என்றார். 

இயக்குநர் S.S.ராஜமௌலி பேசும்போது, “சில வருடங்களுக்குப் பிறகு உங்களை இங்கே சந்திப்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. நீண்ட நாட்கள் கழித்து உங்களை சந்திப்பதற்கு என்னை அனைவரும் மன்னிக்க வேண்டும். அடுத்த மாதம் எங்கள் மொத்தப் படக் குழுவினருடன் உங்களை மீண்டும் சந்திப்போம். அதற்கு மிகப் பெரிய அளவில் திட்டமிட்டிருக்கிறோம். அப்போது உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறோம்.

இந்த RRR(இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தில் மிகப் பெரிய ஆக்சன் காட்சிகள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு ஆக்சன் காட்சிக்கு பின்னும் பெரிய எமோஷன்ஸ் இருக்கும். அந்த எமோஷன்தான் இந்தப் படத்தின் உயிர் நாடி. அந்த எமோஷனை, ஆத்மாவை வெளிக்காட்டும் ஒரு இசைதான் உங்களுக்கு இன்று அறிமுகப்படுத்தும் உயிரே பாடல்.

அண்ணன் மரகதமணி அவர்கள்தான் இசையமைத்துள்ளார். அவர் எப்போதும் படத்தின் காட்சிகளுக்கு இசையமைக்க மாட்டார். படத்தின் உயிர் எதைப் பற்றியதோ, படம் என்ன சொல்ல வருகிறதோ அதற்குத்தான் இசையமைப்பார்.

அப்படி இந்த RRR(இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தின் மொத்த ஆத்மாவையும் இந்தப் பாடலில் கொண்டு வந்திருக்கிறார். மதன் கார்கி இந்தப் பாடலை கேட்டபோதே கண்ணீர் சிந்தி ரசித்தார். அருமையான பாடல் வரிகளை தந்திருக்கிறார். இதை இன்னும் உலகிற்கு காட்டவில்லை. முதல்முறையாக உங்களுடன் அந்தப் பாடலை இங்கு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி…” என்றார்.

- Advertisement -

Read more

Local News