திரைப்பட இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், சமீபத்தில் சக இயக்குநர்களுடனான கலந்துரையாடலில் பங்குபெற்றார்.
அப்போது அவர், “சினிமாவுக்கு வர்றப்போ டெரர் கதைகள்தான் நிறைய வச்சிருந்தேன். ஆனா சென்னை 28, சரோஜா மாதிரி ஜாலியான படங்கள் தொடர்ந்து ஜெயிக்கிறதை பார்த்தேன். அதுக்கு அப்புறம்தான் நானும் அந்த டிராக்குக்கு மாறினேன். நானும் ரவுடிதான் போன்ற படங்களை இயக்கினேன்.
தவிர சாதாரணமாகவே நான் ஜாலியான ஆளு. வாழ்க்கையில் எதையும் பெரிசா எடுத்துக்க மாட்டேன். எவ்வளவு கஸ்டம் வந்தாலும், அதை டேக் இட் ஈசி என கடந்துவிடுவேன். என் ஜாலியான படங்கள் ஜெயிக்க இதுவும் காரணமாக இருக்கும்” என்றார்.