அமீர் இயக்கத்தில் நடிகர் ஜீவா,சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராம்.
மனநோயளி கதாபாத்திரத்தில் ஜீவா,அவருக்கு அம்மாவாக சரண்யா நடித்திருப்பார். வித்தியாசமான கதை பின்னணியில் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்ற படம் ராம்.
படத்தின் அனுபவம் பற்றி சரண்யா ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
கொடைக்கானலில் 20 நாள் படப்பிடிப்பு நடந்தது. அமீர் எங்களை வீட்டு சிறையில் வைத்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். இந்த படத்தில் நடிகர்கள் குறைவு. படப்பிடிப்பு மாதிரி இருக்காது ஏதோ சுற்றிப்பார்க்க வந்தது போல் இருக்கும்.
நானும் ஜீவாவும் நிறைய பேசியிருக்கிறோம், ஆராரிராரோ… பாட்டு மட்டும் பிட்டு பிட்டா பத்து நாள் எடுத்தார் அமீர். நாங்க எதுக்கு வந்தோம் என்பதையே மறந்து ஜாலியாக இருந்தோம். இப்படித்தான் எங்களை டென்ஷன் இல்லாமல் வைத்திருந்தார் அமீர் என்றார் சரண்யா.