Thursday, April 11, 2024

ஆனந்தராஜை மிரள வைத்த ரஜினி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் உண்மையிலேயே பயந்த சம்பவத்தை விவரித்தார் நடிகர் ஆனந்தராஜ்.

“அப்போது பாட்சா படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்த நேரம். திடீர்னு ரஜினி கூப்பிட்டார். நான் போனேன். நான் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கணும் அப்படினு சொன்னார்.

எனக்கு ஆச்சரியம்.. அந்தப் படத்துல ஏற்கெனவே ரகுவரன், சரண்ராஜ், தேவன்  என்று வில்லன் நடிகர்கள் இருக்காங்க. நம்மளை எதுக்குக் கூப்பிடுறாருன்னு நினைச்சேன்.

என் எண்ணத்தை புரிஞ்சிகிட்டு, ‘என்னை நீங் கட்டிவச்சு அடிக்கிற மாதிரி ஒரு காட்சி.. அதனாலதான் உங்களைக் கூப்பிட்டேன்’  என்றார்.

உண்மையாகவே எனக்கு பயமா போச்சு. ‘சார்.. அப்படி நான் நடிச்சா.. உங்க ரசிகர்கள் என்னை கல்லாலேயே அடிப்பாங்க’ என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

அதற்கு ரஜினி, ‘ என்னை ஒருத்தர்  அடிக்கிறாருன்னா.. அதை மக்கள் நம்பனும்.. ஏத்துக்கணும்.. அதுக்கு ஏற்ற ஆள் நீங்கதான்’ என்றார்.  பயம் போய்.. பெருமையா உணர்ந்தேன்.. அந்த காட்சியில நடிச்சேன்” என்று தான் பயந்த வியத்தை பகிர்ந்துகொண்டார் ஆந்தராஜ்.

- Advertisement -

Read more

Local News