Friday, April 12, 2024

மும்பையில் இனிதே துவங்கியது “கொட்டேஷன் கேங்” திரைப்படம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெகு சில படங்களே படப்பிடிப்புக்கு முன்னரே நம் எதிர்பார்ப்பை தூண்டும் படமாக ஆர்வத்தை அதிகரிக்கும்  படைப்பாக இருக்கும். 

அந்த வகையில் ‘கொட்டேஷன் கேங்’ திரைப்படம் துவங்குவதற்கு முன்னதாகவே தரமான படைப்பு என பெயர் பெற்றுள்ளது.

லும் ஃபிலிமினாடி எண்டர்டெயின்மெண்ட்(Filminaty Entertainment) நிறுவனத்தின்  சார்பில் தயாரிப்பாளர் காயத்திரி சுரேஷ், ்ரீ குரு ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில்  தயாரிப்பாளர் G.விவேகானந்தன் உடன் இணைந்து இந்த ‘கொட்டேஷன் கேங்’  திரைப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார் படத்தின் இயக்குநரான விவேக்.

இப்படம் ஒரே நேரத்தில் ஐந்து இந்திய மொழிகளில் தயாராகிறது.

தேசிய விருது பெற்ற நாயகியான ப்ரியாமணி மற்றும் பேபி சாரா இருவரும் படத்தின் முன்னணி கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்கள்.

இப்படத்தில்  ரெட் ரெய்ன் புகழ் விஷ்ணு வாரியர், Zee ஜி புகழ் அக்‌ஷயா,  கியாரா, சோனல்,  கேதன் கராந்தே, சதீந்தர் மற்றும் ஷெரீன் ஆகிய இளம் திறமையாளர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.

படத்தின் இயக்குநர் விவேக் படம் குறித்து பேசும்போது, “இப்படம் அனைத்திந்திய ரசிகர்களுக்கு கதை சொல்லலிலும், தொழிற் நுட்ப வடிவிலும் புதிய அனுபவமாக, தரமான படைப்பாக இருக்கும்…” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 2020 டிசம்பர் 5 அன்று மிகப் பிரமாண்டமான விழாவுடன் மும்பையில் துவக்கப்பட்டது.

மும்பை, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் மிக முக்கிய பகுதிகளில் படமாக்கப்படுகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மிக விரைவில் வெளியிடவுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News