Touring Talkies
100% Cinema

Saturday, September 13, 2025

Touring Talkies

“புனீத் இனி வரக் கூடிய கலைஞர்களுக்கு முன்னுதாரணம்” – நடிகர் சிவகார்த்திகேயனின் அஞ்சலி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் சமாதியில் நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று பெங்களூரில் திடீர் மாரடைப்பால் காலமான கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் உடல் அவருடைய குடும்ப ஸ்டூடியோவான கண்டிரவா ஸ்டூடீயோவில் அவருடைய தாய், தந்தையின் சமாதிக்கு அருகிலேயே புதைக்கப்பட்டது.

தமிழ்த் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று பெங்களூர் சென்று புனீத்தின் சமாதியில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், “புனீத்தின் மறைவை இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு புனீத் ராஜ்குமாருடன் பேசியிருந்தேன். அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். சிறந்த ஆன்மா. அவருடைய மறைவு கன்னடம் மட்டுமில்லாமல் இந்தியத் திரையுலகம் முழுவதுக்கும் பெரும் இழப்பு.

அவருக்கு இறப்பு கிடையாது. அவருடைய செய்திருக்கும் நல்ல விஷயங்கள் நினைவு கூறப்படும். இனி வரக் கூடியவர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணம். திரையில் மட்டுமல்ல, திரைக்கு பிந்தைய வாழ்க்கைக்கும் அவர் முன்னுதாரணமாக திகழ்வார்.

“பெங்களூரு வந்தால் என்னை சந்திக்க வேண்டும்” என்று என்னிடம் கூறியிருந்தார். நான் இப்போது பெங்களூருவில் இருக்கிறேன். அவரைத்தான் பார்க்க முடியவில்லை. அவருடைய மறைவின் அதிர்ச்சியிலிருந்து இன்னமும் என்னால் வெளியில் வர முடியவில்லை…” என்றார் சிவகார்த்திகேயன்.

- Advertisement -

Read more

Local News