இந்தி திரை உலகின் முன்னணி நடிகையாக விளங்கிய பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் வெப்சீரிஸ்களில் நடித்து உலக அளவில் பிரபலமானார்.
இந்நிலையில், அமெரிக்க பிரபல பாடகரான நிக்ஜோனாஸை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்கு பின் வாடகைத்தாய் முறையில் இந்தத்தம்பதி குழந்தை பெற்றுக்கொண்டது.
இது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ஆனால் இதை பிரியங்கா கண்டுகொள்ளவில்லை.
மகளுக்கு மால்டி மேரி என்று பெயர் வைத்திருப்பதாக அறிவித்தார்;
இந்த நிலையில் மால்டியின் முதல் பிறந்தநாளில் தனது குழந்தை பற்றி பேசினார்.
“என்னைப் பற்றி பிறர் பேசுவதை நான் பொருட்படுத்த மாட்டேன். ஆனால் என் மகள் குறித்து யார் யாரோ பேசுகிறார்கள். இது வருத்தத்தை அளிக்கிறது.
எனக்கு மருத்துவ ரீதியாக சில சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டேன்” என்றார்.