Friday, April 12, 2024

சல்மான்கானுக்கு ‘நோ’ சொன்ன பிரபுதேவா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டின் பலமான கூட்டணியான சல்மான்கான்-பிரபுதேவா கூட்டணி முறிந்ததாக பாலிவுட் முழுவதும் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.

சல்மான்கானை வைத்து தொடர்ச்சியாக 3 ஹிட்டுகளை கொடுத்தவர் இயக்குநர் பிரபுதேவா. ஆனால் கடைசியாக சல்மான்கானின் நடிப்பில் பிரபுதேவா உருவாக்கிய ‘தபாங்-3’, ‘ராதே’ ஆகிய படங்கள் தோல்வியடைந்ததையடுத்து பாலிவுட்டில் பிரபுதேவாவுக்கு இறங்கு முகமாகிவிட்டது.

ஒரே மாதிரியான கேரக்டர் ஸ்கெட்ச். சல்மான்கானின் மேனரிசம்.. கதை அமைப்பு.. திரைக்கதை என்று பாலிவுட்டின் சல்லு பாயின் ரசிகர்களுக்கு பிரபுதேவாவின் இயக்கம் போரடித்துவிட்டதாக சொல்கிறார்கள்.

இதையடுத்து தற்போது மீண்டும் சல்மான்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததை பிரபுதேவாவே ஏற்கவில்லையாம். தெலுங்கு படத்தின் ரீமேக்கில் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான சஜீத் நாடியத்வாலா, சல்மான்கானை அதில் நடிக்க வைக்க இருக்கிறார். இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு பிரபுதேவாவை தேடி வந்திருக்கிறார். ஆனால் நோ சொல்லிவிட்டாராம் பிரபுதேவா.

தற்போதைக்கு மீண்டும் இயக்கம் பக்கமே போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம். தமிழ், தெலுங்கில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாராம். இதனால்தான் சமீபத்தில்கூட ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் பிரபுதேவா.

பிரபுதேவாவின் நடிப்பில் ஏற்கெனவே ‘பொன் மாணிக்கவேல்’, ‘யங் மங் சங்’, ‘பஹீரா’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News