Friday, April 12, 2024

மிஷ்கினின் ‘பிசாசு-2’ படப்பிடிப்பு துவங்கியது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநரான மிஷ்கின் அடுத்து உருவாக்கும் பிசாசு-2’ படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை திண்டுக்கல்லில் துவங்கியது.

தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘பிசாசு-2.’

இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பூர்ணா, காய்த்ரி ரெட்டி (பிகில்) உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கார்த்திக் ராஜா இசையமைக்க, லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்திற்காக திண்டுகல்லில் பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணி நடந்து முடிந்த நிலையில், தைப் பூசத் திருநாளான நேற்று பிசாசு-2’ படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

ஒரே கட்டமாக படப்பிடிப்பினை நடத்தி முடிக்க படக் குழு திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News