Thursday, April 11, 2024

‘பொ.செ. 1’ பூங்குழலியின் ஆசை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. கேரளத்தைச் சேர்ந்த இவர், 2017ம் ஆண்டு ‘நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா’ என்ற மலையாள  படத்தின் திரையுலகில் நுழைந்தார். ‘மாயநதி’ படம் மூலம் தமிழுக்கும் வந்த இவர் தற்போது இரு மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

 இந்நிலையில்தான் பொ.செ.1 படத்தில் ஓடக்காரப் பெண் பூங்குழலியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அதில் தனது முழுத் திறமையைக் காண்பித்து அசத்தினார்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் மருத்துவப் படிப்பு படித்துள்ளேன்.  மருத்துவர் ஆக வேண்டும்  என்பதுதான் என் லட்சியமாக இருந்தது. ஆனால் விபத்து போல திரையுலகத்துக்கு வந்துவிட்டேன்.  ஆனாலும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அப்படியே இருக்கிறது.

சில ஆண்டுகள் திரையுலகில் முழுமையாக ஈடுபடுவேன். பிறகு சினிமா, மருத்துவம் இரண்டுக்கும் நேரம் ஒதுக்கி செயல்படுவேன். இதுதான் என் ஆசை!” என்கிறார்.

நல்ல ஆசைதான்!

- Advertisement -

Read more

Local News