மலையாள சினிமாவில் அரை நிர்வாண காட்சிகளில் நடித்து பிரபலமானவர் ஷகிலா. ஒருகட்டத்தில் கேரளாவில் ஷகிலாவின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு பிற நடிகர்களின் படங்களுக்கு இல்லாமல் போனது. தவிர, ஷகிலாவை கேரளாவின் அவமானமாக பிரச்சாரம் செய்து திரையுலகினர் அவரை கேரளாவிலிருந்து துரத்தினர்.
பிறகு தமிழில் கவர்ச்சி ஆசிரியர், முண்டு உடுத்திய டீக்கடை நாயரின் மனைவி போன்ற கவர்ச்சி கதாபாத்திரங்களில் தமிழ் சினிமா அவரை பயன்படுத்தி வருகிறது. தெலுங்கிலும் இதேபோன்ற கதாபாத்திரங்களே ஷகிலாவுக்கு தரப்படுகின்றன.
அந்த வாய்ப்புகளும் அரிதான நிலையில் நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் மனதை கவர்ந்தார்.
தற்போது பிரபலங்களை பேட்டி எடுக்கிறார். இந்நிலையில் அவர்,” நான் பெரிய பணக்காரி போல் யூடியூப் சேனல்கள் சித்தரித்து வீடியோ வெளியிடுகிறார்கள். ஒரு காலத்தில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 4 லட்சம் சம்பளம் வாங்கியது உண்மைதான். ஆனால், என் பணத்தை எல்லாம் என்னுடைய அக்கா ஏமாற்றிவிட்டார். இதெல்லாம் நான் மீண்டும் சிரமத்துக்கு ஆளேனேன்” என்று ஷகிலா உருக்கமாக கூறியுள்ளார்.