Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“இதுவரை யாரும் என்னை காதலிக்கலை!”: ஜெய் வருத்தம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரையுலகின் “அப்பாவி” நாயன் என்றால் அது ஜெய்தான்.  வசன உச்சரிப்பு, முகபாவனை ஆகியவை இளைஞர்களை கவரும்.  பலரும், “ விஜய் போலவே இருக்கீங்க.. காதல் காட்சியில அப்பாவி மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு தூள் கிளப்புறீங்க” என்றெல்லாம் பலரும் பாராட்டுவது உண்டு.

தனிப்பட்ட முறையிலும் பல திறமைகள் கொண்டவர்.  நடிகர், இசை அமைப்பாளர், கார் ரேசர் என பல திறைமைகள் அவருக்கு உண்டு.

இத்தனை இருந்தும் தன்னை யாரும் காதலிக்க வில்லை என்று சோகமாகச் சொல்கிறார் ஜெய்.

அவர், “நான் பத்தாவது வரைதான் படிச்சேன். பாய்ஸ்க்கு நான் ரவுடி. கேர்ள்ஸ் கிட்ட அப்பாவியா காண்பிச்சுக்குவேன்.  இரண்டாவது அப்படியே சினிமாவுக்கும் செட் ஆயிருச்சு. ஆனா அப்பவும் சரி, இப்பவும் சரி, என்னை யாரும் காதலிச்சதே இல்லை” என்கிறார். “கிசு கிசுக்கள் எல்லாம் வந்ததே” என்று கேட்டால், “அதான் நீங்களே சொல்லிட்டீங்களே.. கிசு கிசுன்னு.. அதுல எங்க உண்மை இருக்கப்போவுது” என்கிறார் அதே அப்பாவி முகத்தை வைத்துக்காண்டு.

- Advertisement -

Read more

Local News